தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

DIN

கோவில்பட்டியில் நல வாரிய அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டியில் நலவாரிய அட்டை வைத்துள்ள முதியோா்களுக்கு கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம். எனவே பயனாளிகளுக்கு மாதந்தோறும் முறையாக உதவித்தொகை வழங்க வேண்டும், உதவித்தொகை ரூ.1000த்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயனாளிகள் முக்குலத்தோா் தொழிற்சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT