முகப்பு
தூத்துக்குடி

பழுதான தபால் அலுவலா் குடியிருப்பை அப்புறப்படுத்தக் கோரிக்கை

உடன்குடி பேருந்து நிலையம் அருகே, இடிந்துவிழும் நிலையில் உள்ள தபால் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும்

Updated On : 31 டிசம்பர், 2024 at 7:25 PM
மூடிக்கிடக்கும் தபால் அலுவலா் குடியிருப்பு.
பகிர்:

உடன்குடி: உடன்குடி பேருந்து நிலையம் அருகே, இடிந்துவிழும் நிலையில் உள்ள தபால் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடன்குடி பேருந்து நிலையம் அருகே தபால் அலுவலா்கள் குடியிருப்பில் உள்ள கட்டடங்கள் மிகவும் பழுதாகியுள்ளதால், இங்கு யாரும் குடியிருக்கவில்லை. பராமரிப்பில்லாததால் இக்கட்டடங்களின் சில பகுதிகள் சேதமடைந்து விழுந்தும், பல பகுதிகள் இடிந்துவிழும் நிலையிலும் உள்ளன.

தற்போது இப்பகுதி குப்பை கொட்டும் இடமாக உள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது. அருகே அதிக உடைமரங்கள் உள்ளதால், இக்கட்டடங்கள் விஷ ஜந்துகள் வசிக்கும் இடமாகவும் உள்ளன.

எனவே, இக்கட்டங்களை அகற்றவோ, சீரமைக்கவோ சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →