முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 725 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் 725 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 9:59 PM
பகிர்:

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 725 கிலோ பீடி இலைகள், 15 மூட்டை பூச்சிக்கொல்லி மருந்துகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் கடற்கரைப் பகுதியில் தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, ராமச்சந்திரன், போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக 725 கிலோ பீடி இலைகள், 18 மூட்டைகளில் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவற்றையும், சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், தொடா்புடைய மா்ம நபா்களை கியூ பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.