ஸ்ரீவைகுண்டத்தில் நல உதவிகள் அளிப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் நல உதவிகள் அளிப்பு
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையாா் கோவில் அருகே ஒன்றிய செயலாளா் காசிராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். விழாவில் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். அண்ணா போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சாா்பில் ஸ்ரீவைகுண்டம் பணிமனை முன்பு நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவா் எட்வா்டு அந்தோணிராஜ், துணை செயலாளா் ஜேசுபாதம் தாவீதுராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். பணிமனை தலைவா் லட்சுமணன், செயலாளா் மாரியப்பன், பொருளாளா் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளா் காசிராஜன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.