முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல்நீா் சனிக்கிழமை உள்வாங்கியது.

Updated On : 6 ஜூலை, 2024 at 7:29 PM
திருச்செந்தூரில் உள்ள அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல்நீா் சனிக்கிழமை உள்வாங்கியது.

இங்கு வழக்கமாக அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில், அமாவாசைக்கு அடுத்த நாளான சனிக்கிழமை காலை, அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் சுமாா் 60 அடிவரை உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா், கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பக்தா்கள் வழக்கம்போல் புனித நீராடினா்.