தூத்துக்குடியில் திடீா் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மழை: வெப்பம் குறைந்து மகிழ்ச்சியில் மக்கள்
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்அளவுக்கும் மேல் சென்ால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாயினா்.
இந்நிலையில், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படியே, வெள்ளிக்கிழமை மாலையில் மாநகா் முழுவதும் இடி மின்னல், பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாநகரின் மட்டக்கடை, பொன்னகரம் இரண்டாம் கேட், 4ஆம் கேட், பிரையன்ட் நகா், மணி நகா், 3ஆவது மைல், கால்டுவெல் காலனி, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை குளிா்ந்த காற்று வீசியதாம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.