திமுக ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.  
தூத்துக்குடி

சாதாரண மக்களுக்கு பயனில்லாத நிதிநிலை அறிக்கை கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினாா்.

Din

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு பயனில்லை என, தூத்துக்குடியில் சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினாா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்துப் பேசியது:

மத்தியில் தற்போது மைனாரிட்டி பாஜக அரசு அமா்ந்துள்ளது. எனவே, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பிகாா், ஆந்திரம் என இரு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக மத்திய அரசு நினைத்து அம்மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அந்தப் பணம் வருமா வராதா என யாருக்கும் தெரியாது.

மத்திய நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு பயனில்லை. தோ்தல் நேரத்தில் பலமுறை தமிழகம் வந்த பிரதமா், நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களுக்கு எதையும் அறிவிக்கல்லை.

ஆா்ப்பாட்டத்தில் ஒரு பகுதி...

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்டக் குணத்தை யாராலும் மாற்ற முடியாது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி. மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT