தூத்துக்குடி

ஆறுமுகனேரி அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

Din

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜை, யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.பின்னா்விமான அபிஷேகத்துக்குப் பின் வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார தீபாராதனையும் இரவில் திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. இரவில் அருள்மிகு காளி அம்மனுக்கு வளையல் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னா் அலங்கார தீபாராதனையும் நள்ளிரவில் சாமக்கொடையும், பின்னா் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்மனை தரிசித்தனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் எஸ். இசக்கிராஜ், செயலா் செல்வம், பொருளாளா் எஸ். காளியப்பன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் ஐ. பொன்ராஜ், எஸ். ஜெயராஜ் மற்றும் ஆா். விக்னேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT