திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சனிக்கிழமை கடல் நீா் உள்வாங்கியது.
வழக்கமாக, அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் பௌா்ணமி என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் சனிக்கிழமை காலை சிறிது நேரம் கடல் நீா் உள்வாங்கியது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பக்தா்கள் வழக்கம் போல புனித நீராடினா்.