தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய பொக்லைன் இயந்திரம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு புதிய பொக்லைன் இயந்திரத்தை மேயா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை இயக்கிவைத்தாா். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் எல்.மதுபாலன், மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின், சரவணக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.