இந்தியா கூட்டணிக்கு புரட்சிகர இளைஞா் முன்னணி ஆதரவு
மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அறிவித்துள்ளனா்.
மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அறிவித்துள்ளனா். அவ்வமைப்பின் தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளா் சுஜித், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரமசிவன், தூத்துக்குடி பகுதி பொறுப்பாளா் உத்தரம், அம்பை பகுதி பொறுப்பாளா் மணிவண்ணன், வீரவநல்லூா் பகுதி பொறுப்பாளா் பெரியாா் பித்தன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில், மக்கள் விரோத நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி நிலவுகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்தபோது வராத பிரதமா் மோடி, தோ்தல் பிரசாரத்திற்காக மட்டும் தொடா்ந்து வருகிறாா். எனவே, ஜனநாயக விரோத பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் . இந்தியா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூா், குரும்பூா், வீரவநல்லூா், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றனா்.