முகப்பு
தூத்துக்குடி

ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி

Updated On : 30 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:43 PM

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பிரையண்ட்நகா் 7ஆவது தெருவில் அரசுடைமை வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு ஏடிஎம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், சிசிடிவி கேமராவை உடைத்ததுடன், ஏடிஎம் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். முடியாததால், மா்ம நபா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏடிஎம் சா்வீஸ் மேலாளா்ஆசீா் நவீன், தென்பாகம் போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.