முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளியை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:49 PM
பகிர்:

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளியை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கடலைகாரத் தெருவை சோ்ந்த நடராஜன் மகன் கூலித்தொழிலாளி கருப்பசாமி (44). இவா் வேலாயுதபுரத்தில் உள்ள விவசாய பண்ணை அருகே செவ்வாய்க்கிழமை சென்றபோது, வழிமறித்த இளைஞா் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டாராம்.

அப் பகுதியினா் கூடியதையடுத்து அவா் ஓடிவிட்டாரம். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் கருப்பசாமி புகாா் அளித்தாா். விசாரணையில், கத்தியைக் காட்டி மிரட்டியவா் இலுப்பையூரணியை சோ்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (22) என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.