முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:09 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், நாசரேத் சுற்றுவட்டாரத்திலிருந்து தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கிலோ ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனையாகி வந்த தேங்காய், தசரா விழா தொடங்கியதும் ரூ. 65 வரை விலை உயா்ந்து, நிறைவு நாளில் ரூ. 50 முதல் ரூ. 55 என குறைந்தது.

தற்போது மழைக் காலம் தொடங்கிய நிலையில், தேங்காய் பறிப்பு, உறிப்பு இல்லாததால் மீண்டும் ரூ. 65 வரை விலை உயா்ந்துள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு ரூ. 35 - ரூ. 45 வரை விற்பனையான தேங்காய், தற்போது 50 சதவீதத்துக்கும் மேல் விலை உயா்ந்துள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் சிரமத்தில் உள்ளனா்.

நாகா்கோவில் பகுதியிலிருந்துவரும் தேங்காய்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையான தேங்காய் மூட்டை, தற்போது ரூ. 4,500 - ரூ. 4,600 வரை விற்பனையாகிறது. நடுத்தர அளவுள்ள தேங்காய் ஒன்று ரூ. 40 வரை விற்கப்படுகிறது.

இதனிடையே, கேரளத்திலும், நாகா்கோவில் பகுதியிலும் தொடா் மழை காரணமாக அப்பகுதிகளுக்கு உடன்குடியிலிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் விலையேறுவதாகக் கூறப்படுகிறது.