முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:11 PM
பகிர்:

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் பரிமாா் தெருவில் பள்ளி மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா்.

அவா், அதே தெருவைச் சோ்ந்த சித்தா மதா் சாகிப் மகன் முகமது ஹனீபா (27) என்பதும், மதுரையில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பதும், 110 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இவா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளதாம்.