முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா நாளை தொடக்கம் - 27இல் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா நாளை தொடக்கம்

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:21 PM
செய்தியாளா்களிடம் பேசிய தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா். உடன், கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமையும் (அக். 19), தேரோட்டம் 27ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோயில் தியான மண்டபத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா சனிக்கிழமை (அக். 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். சிகர நிகழ்வான தேரோட்டம் இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில், சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

19 முதல் 28ஆம் தேதி வரை சுவாமி-அம்பாள் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், 11ஆம் நாளான இம்மாதம் 29ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறும் என்றாா் அவா்.

கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, சிவன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், அறங்காவலா்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், வி.எம். ஜெயலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.