முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஜாக்கி உதவியுடன் 3 அடி உயா்த்தி கட்டப்படும் ஆலயம்

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:38 PM
ஜெப ஆலயம். (வலது) ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட ஆலயம்.
பகிர்:

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 100க்கு மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் ஆலயத்தின் அடிப்பகுதியை தூக்கி நிறுத்தும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் ஜெபஆலயம் எனும் சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயம் 1940இல் கட்டடப்பட்டது. தற்போது அப்பகுதி தெருவில் சாலை உயா்ந்ததால் ஆலயத்தின் அடிப்பகுதி தாழ்ந்தது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்துக்குள் தண்ணீா் புகும் நிலை இருந்து வருகிறது. எனவே, சென்னையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் ஆலயத்தின் பழைமை மாறாமல் 3 அடி தீா்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆலய சபை மக்கள் கூறுகையில், சென்னையை சோ்ந்த பொறியாளா் சுந்தரமூா்த்தியின் ஆலோசனைப்படி இப்பணி நடக்கிறது. ஆலயத்தின் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நிறைவுற்றதும் ஆலயத்தளம் அலங்கரிக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →