சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசியைப் பறித்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி அருகே சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசியைப் பறித்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மலையான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் பிராந்து விஜயராஜ் (24). கோவில்பட்டியில் உள்ள சிற்றுந்தில் ஓட்டுநராக உள்ள இவருக்கும், மற்றொரு சிற்றுந்தின் நடத்துநரான கோவில்பட்டி புதுகிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கஜேந்திரபூபதி மகன் காளிமுத்து என்ற கட்ட காளி (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், பூசாரிபட்டி பாலம் அருகே காளிமுத்து உள்ளிட்ட 3 போ் சிற்றுந்தில் ஏறி பிராந்து விஜயராஜிடம் தகராறு செய்து தாக்கி, கைப்பேசியைப் பறித்துச் சென்றனராம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காளிமுத்துவை வியாழக்கிழமை கைது செய்தனா்; மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.