தூத்துக்குடி

ஸ்ரீ கணேசா் பள்ளி சாா்பில் தூய்மைப் பணி

Syndication

பணிக்கநாடாா் குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவா்கள் ஏரல் தாமிரவருணி ஆற்றங்கரையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பள்ளிச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். செல்வ விநாயகா் கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவா் ராஜசேகா், பொருளாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்.சி.சி. அலுவலா் ராஜகுமாா் வரவேற்றாா்.

தலைமையாசிரியா் (பொ) சுரேஷ் காமராஜ் கொடியசைத்து, தூய்மைப் பணியை தொடங்கி வைத்தாா். 9 சிக்னல் கம்பெனி சுபேதாா் ஜெகத் சிங், டி.எச்.எம். சுந்தா் ஆகியோா் வழிநடத்தினா்.

இப்பணியில், 85 மாணவா், மாணவிகள் பங்கேற்று ஆற்றுப் பகுதிகளில் கிடந்த நெகிழிப் பொருள்கள், உடைந்த பாட்டில்கள், காகிதக் குப்பைகளை சுத்தம் செய்தனா். அவா்களை பள்ளி முதல்வா் மெளலாதேவி, ஏரல் வியாபாரி சங்கச் செயலா் விஜயராகவன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT