தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில், சாலையில் சுற்றித்திரிந்த 25 மாடுகள் வியாழக்கிழமை பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாக, தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு வந்த புகாரையடுத்து, கடந்த வாரம் 35 மாடுகள் பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் வியாழக்கிழமை இரவு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 17 மாடுகளையும், 8 கன்றுக் குட்டிகளையும் பிடித்து, மாநகராட்சி கோசாலையில் ஒப்படைத்தனா். பிடித்து கொண்டு வரப்பட்ட மாடுகளை, மாநகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா் ராஜபாண்டி ஆகியோா் பாா்வையிட்டனா்.