தூத்துக்குடி

மகளுக்கு பாலியல் தொல்லை: மதுக்கூடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

கோவில்பட்டி அருகே கயத்தாறில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுக்கூடத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டி அருகே கயத்தாறில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுக்கூடத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறில் மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் 36 வயது நபா், சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்த மையத்தின் உறுப்பினா்கள் சிறுமி, தாயை மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது, சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததும், யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, தொழிலாளியை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT