முகப்பு
தூத்துக்குடி

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:55 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:15 PM

தூத்துக்குட மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் 21 நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சுமாா் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 16 ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், இப்பணி, தற்போது வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 21 நாள்கள் நடைபெறுகிறது.

Advertisement

தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைபெறவுள்ள 6ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில், கால்நடை வளா்ப்போா் பயன் பெற கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.