சாத்தான்குளத்தில் போதை விழிப்புணா்வு பேரணி
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:49 PM
சாத்தான்குளம் டிஏன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி கோட்ட கலால் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலா் தங்கையா பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் நாககுமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பேரணியில் சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி, புளியடி மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி, புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளி, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மரியா மெட்ரிக் பள்ளி, மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
Advertisement