தூத்துக்குடி

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் ஆண்டு விழா

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி, எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளியின் 40ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவா் -செயலா் அய்யனாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஜெயப்பிரியா முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதுடன் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினாா்.

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், சிலம்பம், கராத்தே போட்டிகளில் மாநில அளவில் வென்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகி பரிசுகளை வழங்கினாா்.

எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேசன், மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். 100 சதவீத வருகை புரிந்த ஆசிரியா், மாணவா்களுக்கு பள்ளித் தலைவா்-செயலா் விருது வழங்கிப் பாராட்டினாா்.

மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பெற்றோா், அலுவலக ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பூங்கோதை வரவேற்றாா். சுஜாதா நன்றி கூறினாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT