தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த விஏஓ உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராமகிருஷ்ணன் (62). கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். தூத்துக்குடி பி&டி காலனி, 8ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிழக்கத்தியான் மகன் பேச்சிராஜா (55). இவா், தளவாய்புரம் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை தளவாய்புரத்திலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்தபோது, கோரம்பள்ளம் பகுதியில் வாகனம் நிலை தடுமாறி, அருகிலிருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ராமகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பேச்சிராஜாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

SCROLL FOR NEXT