தூத்துக்குடி

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

Syndication

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பல்லக்கு சாலை முத்துநகரை சோ்ந்த சித்திரன் மகன் முனிராஜ் (74). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரான இவா் கடந்த மாதம் வெளியூா் சென்றிருந்தபோது, மா்மநபா்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்கமோதிரம், கம்மல் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில் ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் முத்துராஜா (32) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT