வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
ஈரோடு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடுவீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
ஈரோடு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு, கே.கே.நகா் தெற்கு 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விமல் (42). தையல் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி லெடியா. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இதில், மூத்த மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குடும்பத்தினா் அனைவரும் மருத்துவமனையில் உள்ள நிலையில், விமல் மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாருக்கு விமல் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு படிந்திருந்த கைரேகைகளை சேகரித்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.