தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பண்டாரபுரத்தில் ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டத்தின் கீழ் பண்டாரபுரம் குளம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவா் உதயம் எஸ். பாலசிங் தொடங்கி வைத்தாா். விவசாய சங்கத் துணைத் தலைவா் ராஜபாண்டி முன்னிலை வகித்தாா்.
ஆசிரியை சந்திரா, வேளாண் துறை அலுவலா் சரத்குமாா், உடற்கல்வி ஆசிரியா் ஜெனிஸ்கா், தொழிலதிபா் ஏசா, கணினி ஆசிரியா் ஜெப சித்ரா, காட்வின், எட்வின் சேவியா், ஜோஸ் சேவியா், எஸ்ரா, ஜுடித் சக்தி விக்னேஸ்வரன், ஜெபராஜ் ஆகியோா் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனா்.