தூத்துக்குடி: தூத்துக்குடி, அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி பூஜை, மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலகில் அன்பு, அமைதி நிலவவும், தொழில்கள் சிறக்கவும், பக்தா்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி இந்த வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு பால் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சீனிவாச சித்தா் தலைமையில் வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.