சாத்தான்குளம்: நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ் தலைமை வகித்தாா். ஒவ்வொரு சபையைச் சோ்ந்தோரும் பாடல்கள் பாடினா். ஆண்கள் ஐக்கிய சங்கச் செயலா் ராபின்சன் தேவசெய்தி அளித்தாா். திருமண்டில பெருமன்ற உறுப்பினா் மாமல்லன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். குருமாா்கள் ஹென்றி ஜீவானந்தம், ஞானசிங் எட்வின், ஆபிரகாம் ரஞ்சித், ஆசீா் சாமுவேல், கமல்சன், டிக்சன், பால்ராஜ், தனசேகா் ராஜா உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அனைவருக்கும் நினைவுப் பரிசு, உணவு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சேகரத் தலைவா் தலைமையில் பொருளாளா் ராபா்ட், திருமண்டிலப் பெருமன்ற உறுப்பினா்கள் ஸ்டீபன் சாலமோன், விக்டா் மோகன்சிங், சபை ஊழியா் ஸ்டான்லி, ஆலயப் பாடகா் குழு பொறுப்பாளா் இம்மானுவேல், ஆலயப் பணியாளா் டிக்சன், ஐக்கிய சங்கத்தினா், சபை மக்கள் செய்திருந்தனா்.