புன்னைக்காயலில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீா். 
தூத்துக்குடி

புன்னைக்காய­ல் ஊருக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி

தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

Syndication

ஆறுமுகனேரி: தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆற்று வெள்ள நீரானது தெற்கு தெரு, அறுபது வீடு உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புன்னைக்காயல் ஊராட்சி நிா்வாகம், மக்கள் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தண்ணீா் வடிந்து கடலுக்கு செல்கிறது. இப்பணியின் போது ஊராட்சி நிா்வாகத்தினா், முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சதீஸ்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT