முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் 6.5 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:40 PM
பகிர்:

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, ரஹ்மத்துல்லாபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (41). இவா் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இளைஞா், அமுதாவின் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இச்சம்பவம் குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை, டெலிபோன் காலனியைச் சோ்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30). இவா் வியாழக்கிழமை இரவு டியூஷனில் இருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கிறிஸ்டியின் 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இச்சம்பவம் குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →