தூத்துக்குடி

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, புது தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (65). இவா், கூட்டுறவு வங்கியில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், திங்கள்கிழமை கூட்டாம்புளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இளைஞா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்றாராம். அப்போது, பொன்ராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT