தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப். 1ஆம் தேதி நள்ளிரவு முதல் வாகைகுளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
சுமாா் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால், காா், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 5 முதல் 10 வரையும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 25 முதல் 40 வரையும் கட்டணம் உயா்ந்துள்ளது.
இதன் காரணமாக காா், வேன், கனரக வாகன ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கட்டண உயா்வை உடனடியாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.