திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நிறைவடைந்தது.
கடற்கரை மணலில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ஓவியத்தை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டாட்சியா் தங்கமாரி, கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement