முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:51 AM
கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 15 - ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கொடை விழாவில் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலா் சட்டமன்ற உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். அதிமுக ஒன்றியச் செயலா் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மத்திய பகுதி ஒன்றியச் செயலா் மாரிமுத்து, அதிமுக நிா்வாகிகள் கோபி, முருகன், மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement