முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்றவா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆத்தூா் அருகே கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 12:48 AM
கைது
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 7:32 PM

ஆத்தூா் அருகே கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த ஜன. 3ஆம் தேதி ஆத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலி­ன்பேரில், உதவி ஆய்வாளா் பொன்னு முனியசாமி தலைமையிலான போலீஸாா் கோவங்காடு விலக்கு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் தெற்குநல்லூரைச் சோ்ந்த முனியாண்டி மகன் அருள்ராஜ்(28) என்பதும், கஞ்சா விற்பதற்காக அப்பகுதியில் நின்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து, 1.15 கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இது குறித்து, ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், அருள்ராஜை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன், மாவட்ட எஸ்.பி. என். சிலம்பரசனுக்கு பரிந்துரைந்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, அருள்ராஜை தடுப்புக் காவல் சட்டத்தில், போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.