முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

தூத்துக்குடியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகளின் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:13 AM
கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 9:55 PM

தூத்துக்குடியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகளின் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் அலுவலா் காயத்ரி வரவேற்றாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும், மாநில சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி வைத்து, 250 கா்ப்பிணிகளுக்கு 10 வகையான சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.

மேலும் அவா் பேசுகையில், கா்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்றாா். பின்னா், சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, கா்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளை பரிமாறினாா்.

Advertisement

இதில், தேசிய ஊட்டச்சத்து இணை இயக்குநா் அன்பு, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, ஊரக குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் திலகா, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், கவுன்சிலா் ஜாக்குலின்ஜெயா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், துணை அமைப்பாளா்கள் அருணாதேவி, பிரபு, பெருமாள் கோயில்அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் ரூபி பொ்னான்டோ நன்றி கூறினாா்.