முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 2:53 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:46 PM

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவகுமாா் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தாா். மருத்துவா் ஆக்னஸ் லலிதா புற்றுநோய் குறித்து விளக்கிப் பேசினாா்.

அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து, அவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவா் இன்சுவை வரவேற்றாா். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவா் லலிதா சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.