குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு பரிசளிப்பு  
தூத்துக்குடி

புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தலப் பெருவிழா

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தலப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தலப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா ஜன. 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மதுரை உயா் மறைமாவட்டம் முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பலிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, காலையில் புனித அந்தோணியாா் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தா்கள் உப்பை தூவி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் 100-க்கும் மேற்பட்ட பங்குத் தந்தைகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, ஆலய பங்குத் தந்தை மோட்சராஜன், உதவி பங்குத் தந்தை மிக்கேல்சாமி, ஆன்மிகத் தந்தை சகாயதாசன், பீட்டா் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்திருந்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT