சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
சாத்தான்குளம் இட்டமொழி சாலையில் செயல்படும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் புதன்கிழமை காலையில் மரநாய் ஒன்று நுழைந்தது. இது குறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியா்கள் அங்கு சென்றனா். அங்கு பதுங்கியிருந்த மரநாயை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.