தூத்துக்குடியில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், அனல்மின் நிலையங்களில் பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் மேற்கொள்ள வேண்டிய ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முழுமையாக முடங்கின. அலுவலகப் பணிகளும் பாதிக்கப்பட்டன. என்.டி.பி.எல். அனல்மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஒட்டுமொத்தமாகப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.