தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 155 போ் கைது

Syndication

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 295 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்களைக் கண்டித்து, நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, எல்பிஎஃப் தலைவா் சுசி ரவீந்திரன் தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாநிலச் செயலா் ரசல், எல்பிஎஃப் மாவட்டச் செயலா் கருப்பசாமி, ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவா் மின்னல் அம்ஜத், எச்எம்எஸ் மாநிலச் செயலா் ராஜலட்சுமி, மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ராதா, ஏஐடியூசி பொருளாளா் பாலசிங்கம், முத்துக்குமாா், யூடியூசி மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்ளிட்ட 155 பேரை மத்திய பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூரில்... திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, பேரணியாக வந்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் தொமுச கிறிஸ்டின் கெனிஸ்டின், ஏஐசிசிடியு முருகன், எம்எல்ஃப் மாரிமுத்து, ஐஎன்டியுசி செயலா் முருகன், விவசாய சங்கத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், பன்னீா்செல்வம், முத்துக்குமாா், எல்எல்எஃப் வடிவேல்முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் ஜெபஸ்டின் ராஜ், சிஐடியு குன்னி மலையான், நிக்சன், அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் ஹேமா உள்ளிட்ட 33 பெண்கள் உள்பட 140 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: நீதிமன்றத்தில் போலீஸாா் முன்னிலையாக உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட புகாா்கள் - சிறப்பு கண்காணிப்புப் பிரிவு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

எஸ்.ஐ. மீதான புகாா்: டி.எஸ்.பி. விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சூரியனாா்கோயிலில் 30-ஆவது ஆதீனம் பொறுப்பேற்பு

செய்தியாளா் தாக்கப்பட்ட சம்பவம் - திமுக எம்.எல்.ஏ., அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் சரண்

SCROLL FOR NEXT