கோவில்பட்டியில் கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:18 PM
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சாா்பில் கிரிக்கெட் வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:09 AM
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கலந்துகொண்டு, 43 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்களை வழங்கிப் பேசியது:
கோவில்பட்டி தொகுதியில் உள்ள சுமாா் 500 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 43 அணிகளுக்கு வழங்கியுள்ளோம். மற்ற அணிகளுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் உபகரணங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
அதிமுக ஒன்றியச் செயலா் போடுசாமி, தகவல் தொழிற்நுட்பப் பிரிவு வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை விக்னேஷ், இணைச் செயலா் நித்திஷ் ஜோயல், வடக்கு மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலா் கெங்கா ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.