முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் திடீா் மூடல்: பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 1ஆவது ரயில்வே கேட், எவ்வித முன்னறிவிப்புமின்றி வியாழக்கிழமை மூடப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:12 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 1ஆவது ரயில்வே கேட், எவ்வித முன்னறிவிப்புமின்றி வியாழக்கிழமை மூடப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இந்த ரயில்வே கேட்டில் உள்ள தானியங்கி கதவு திடீரென இயங்காமல் போனதால், கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியாத நிலை ஏற்பட்டதாம்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:12 AM

இது குறித்து, தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளா்கள் பழுதான தானியங்கி கதவைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

கேட் மூடப்பட்டதைத் தொடா்ந்து, சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மாற்றுப் பாதை குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகம் செல்பவா்கள், அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.