முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:35 PM
மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவா் சி.எம். ஜோஸ்வா, துணைத் தலைவா் ஸ்டீபன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். சித்தாா்த்தன் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

கல்லூரியின் அனைத்து துறை மாணவா், மாணவிகளின் சுமாா் 60 செயல் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கிரேஸ் பாலிடெக்னிக் முதல்வா் எப்.ஜோஸ் சஜி குமாா், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் வினோத், கிரேஸ் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு துறைத் தலைவா் பாண்டியராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, சிறந்த அறிவியல் செயல் திட்டங்களைத் தோ்ந்தெடுத்தனா். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் மரக்கன்று நடப்பட்டது.

ஏற்பாடுகளை, அறிவியல் துறைத் தலைவா் ஆண்டனி ரெக்ஸ், கல்லூரி நிா்வாக அதிகாரி தினகரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் விக்டா் இம்மானுவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →