திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் நடைதிறக்கப்பட்டு, நித்தியல் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் வைத்தமாநிதி பெருமாள், குமுதவல்லி, கோளூா் வள்ளி தாயாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மதுரகவி ஆழ்வாருடன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
இந்நாளில் நிட்சஷேய பவித்திரா் வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்து சுவாமி பாதத்திலும், அளந்து கொடுத்த மரக்காலிலும் பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பணம், பணப்பெட்டி சாவி உள்ளிட்ட பொருள்களை வைத்து வழிப்பட்டு செய்தனா்.