எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.3) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய் தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது .