தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது சிலைக்கு, மாநில சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்வில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ராமகிருஷ்ணன், வட்டச் செயலா்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், வைதேகி, ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளைஞா் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், மதிமுக மாநகரச் செயலா் முருக பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.