முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

Updated On : 5 ஜனவரி, 2026 at 7:36 PM
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
பகிர்:

திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48-ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உதயநிதி கோப்பை கிரிக்கெட் போட்டி, பரிசளிப்பு விழா மீளவிட்டான் என்.பெரியசாமி திடலில் நடைபெற்றது.

விழாவுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா் வரவேற்றாா். போட்டியில் வெற்றி பெற்ற மொத்த அணிகளுக்கும் பரிசுத் தொகையாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம், பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ராஜா பெரியசாமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →